இலங்கையில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு நோய்!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 56 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல் மாகாணத்தில் 50 சதவீதமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,கண்டி,கேகாலை,குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிக்கின்றது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.