அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான இலங்கைப் பெண்!

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு இலங்கை பெண் கசாண்ட்ரா பெர்னாண்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கசாண்ட்ரா பெர்னாண்டோ மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

அஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த நிலையில் இவர் வடக்கு விக்டோரியாவில் உள்ள மெல்போர்னின் தெற்கே உள்ள டான்டினாங்கில் வசித்து வருகின்றார்.

இவர் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற முடியாத பின்னணியில் இருந்த நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு வந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு அறிவுரைகளை வழங்கி பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

மேலும், கோவிட் தொற்றுநோய் முயற்சியுடன் பணியாற்றிய தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் போராடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *