மாற்றப்படும் முஸ்லிம்களின் வரலாறு – பள்ளிவாசலுக்கு மேலே பெளத்த கொடி!

 

அங்கே மக்­க­ளிடம் நான் கண்­டது வெறுப்­பையும் வன்­மு­றை­யையும் ஆகும். பலான்­கொடை நக­ரி­லி­ருந்து கிட்­டத்­தட்ட 20 கிலோ­மீட்டர் அப்பால் காணப்­ப­டு­கின்ற “கூர­கலை” அல்­லது நாங்கள் அனை­வரும் அறிந்த ஜெய்­லானி பள்ளிவாச­லுக்கு நாங்கள் மேற்­கொண்ட பய­ணத்தைப் பற்றியே இங்கு பேசுகிறேன்.

தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் தோற்றம்
பலாங்­கொ­டையைச் சேர்ந்த மொஹமட் லெப்பை மரிக்கார் அபூ­சாலி 1960 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை, சிங்­கள பெரும்­பான்மை மக்­களின் ஏகோ­பித்த வர­வேற்­புடன் ஐக்­கிய தேசியக் கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி ஐந்து தட­வைகள் பாரா­ளு­மன்றம் சென்ற ஒரு புகழ்­பெற்ற அர­சி­யல்­வாதி. பல ஆண்டு கால­மாக அவரும் அவர் குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்­களும் ஜெய்­லானி பள்­ளியை பரா­ம­ரித்து வந்­துள்­ளார்கள். இன்றும் அவ­ரு­டைய மகள் சட்­டத்­த­ரணி ரொஷானா அபு­சாலி ஜெய்­லானி பள்­ளியின் நிர்­வாக சபையில் ஒரு அங்­கத்­த­வ­ராக இருக்­கின்றார்.

ஜெய்­லானி பள்ளிவாசலின் வர­லாற்றைப் பற்றி அபு­சாலி எழு­திய “தர்பர் ஜெய்­லானி” என்ற நூல் ஜெய்­லானி பள்­ளியின் தோற்­றத்தை பின்­வ­ரு­மாறு கூறு­கின்­றது. “ஈராக்­கினைச் சேர்ந்த சன்­மார்க்கப் போத­கரும், அறி­ஞ­ரு­மான குதுப் முஹி­யத்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் பாவா ஆதம் மலையை தரி­சிப்­ப­தற்­காக கி.பி 1132 இல் இலங்­கைக்கு வந்­துள்ளார். அப்­போது அவர் இன்­றைய ஜெய்­லானி பள்­ளி­வாசல் காணப்­ப­டு­கின்ற மலையில் 12 வரு­டங்கள் நோன்பு நோற்று தியா­னத்தில் ஈடு­பட்­டுள்­ள­தாக “பார்த்­த­சா­ரதி நாயுடு” மற்றும் “சத்­துர ஷங்­காரம்” எனும் நூல்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பின்னர் முஹி­யத்தீன் அப்துல் காதர் ஜீலா­னியின் ஞாப­கார்த்­த­மாக தப்தர் ஜெய்­லானி என இப்­பி­ர­தே­சத்­திற்கு பெயர் சூட்­டப்­பட்டு இம்­மலைப் பிர­தே­சத்­தினை பாரம்­ப­ரிய வணக்­கஸ்­த­ல­மாக முஸ்­லிம்கள் மாற்றிக் கொண்டு தொடர்ச்­சி­யாக இங்கு வர ஆரம்­பித்­துள்­ளனர். வர­லாற்று ஆசி­ரி­யர்­களின் கருத்­துப்­படி 1922இல் இங்கே ஒரு கற்­கு­கையை கூரை­யாக வைத்து இந்த பள்ளி கட்­டப்­பட்­டுள்­ளது”.

ஜெய்­லானி பள்ளியின் இன்­றைய நிலை

பல நூற்­றாண்­டு­க­ளாக முஸ்­லிம்­க­ளினால் கொடி­யேற்றம் செய்­யப்­பட்டு சமய வழி­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற ஜெய்­லானி பள்­ளி­வாசலில் மூன்று நல்­ல­டி­யார்­களின் ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­பட்­டி­ருந்­தன. ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு இர­வோடு இர­வாக இரண்டு அடக்­கஸ்­த­லங்கள் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளன. அது பற்றி தொல்­பொருள் திணைக்­க­ளத்­திடம் கேட்டால் அவர்கள் எந்த ஒரு பதி­லையும் வழங்­க­வில்லை என ஊர் மக்கள் கூறு­கின்­றார்கள். இது பற்றி கேட்­ப­தற்­காக நாங்கள் அண்­மையில் ராஜி­னாமா செய்து கொண்ட முன்னாள் தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் அனுரா மன­துங்­கவை தொடர்பு கொண்ட போது, தான் தற்­போது அந்தப் பொறுப்பில் இல்லை என்­பதால் தன்னால் அது பற்றி எதுவும் கூற முடி­யாது என கூறினார்.

கூர­கலை விகா­ரைக்கு நீங்கள் செல்­லும்­போது முதலில் ஒரு சிங்­கத்தை காண்­பீர்கள். அதன்­பின்னர் ஒரு கப்பல் வடி­வி­லான மலை உச்­சிக்கு செல்­வீர்கள். அதன்­பின்னர் அங்­கி­ருந்து கீழே இறங்கி ஒரு திறந்த வெளிக்கு செல்­வீர்கள். அந்தத் திறந்­த­வெ­ளியின் இடது புறத்­திலே ஐந்து அரச மரங்கள் நடப்­பட்டு இருக்கும். அந்த இடத்­திலே முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான கட்­டி­டங்கள் பல இருந்­துள்­ளன. மேலும் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்ள அடக்­கஸ்­தலம் ஒன்றும் அங்கே காணப்­ப­டு­கின்­றது. அந்த ஐந்து மரங்­க­ளுக்கு மேலே தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் ஒரு காரி­யா­ல­யமும் தரை­மட்டம் ஆக்­கப்­பட்ட அடுத்த அடக்­கஸ்­த­லமும் இருக்­கின்­றது. அத­னோடு மேலே முஸ்­லிம்­க­ளுக்கு பள்­ளிக்கு வரு­வ­தற்­காக ஒரு சிறிய பாதை வழங்­கப்­பட்­டுள்­ளது. இங்கே குறிப்­பி­டத்­தக்க விடயம் யாதெனில் முஸ்­லிம்கள் பள்­ளி­வா­ச­லுக்கு செல்ல வேண்­டி­யது விகா­ரைக்கு உட்­பு­றத்­தி­லி­ருந்து அரச மரங்­களை தாண்டி ஒரு பௌத்த தூபிக்கு கீழால் ஆகும்.

வெறு­மனே ஒன்­றரை ஏக்கர் நிலப்­ப­ரப்­பிற்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஜெய்­லானி பள்­ளியைத் தவிர மிகுதி 56 ஏக்கர் நிலப்­ப­ரப்பை உடைய அந்த பிர­மாண்­ட­மான பௌத்த வணக்­கஸ்­த­லத்தின் வேறு எந்த ஒரு இடத்­திலும் “இங்கே துப்ப வேண்டாம்” என்ற பதா­கையை நாம் காண­வில்லை.

ஜெய்­லானி பள்­ளிக்குள் நாம் உட்­கார்ந்து இருக்­கும்­போது, ஒரு சிங்­கள சகோ­தரர் 10 ,15 பேருடன் அங்கே வந்து பள்­ளியின் உட்­ப­கு­தியை காட்டி “இங்கே புத்த பெரு­மா­னு­டைய ஒரு சிலை இருந்­துள்­ளது. அதனை உடைத்து தான் இவர்கள் பள்­ளியை கட்டி இருக்­கின்­றார்கள். நல்ல வேளை கோட்­டா­பய ராஜ­பக்ஷ , சவேந்­திர சில்வா போன்ற வீரம் படைத்தவர்கள் இருந்­ததால் இந்த புனித பூமி காப்­பாற்­றப்­பட்­டுள்­ளது. நான் அர­சியல் பேச­வில்லை ஆனால் இதுதான் உண்மை” என இரண்டே நிமி­டத்தில் அவர் அறிந்த ஜெய்­லானி பள்­ளியின் வர­லாற்றை பிற­ருக்கும் எத்தி வைத்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து கூர­கல விகா­ரையின் புனர்­நிர்­மாணப் பணிகள் மின்னல் வேகத்தில் இடம்­பெற்­றன. சுமார் இரண்டு வரு­டங்­க­ளிற்குள் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த புன­ர­மைப்பு பணி­க­ளுக்கு வெளி­நாட்­டி­லுள்ள இலங்­கை­யர்­க­ளினால் நிதி­யு­தவி வழங்­கப்­பட்­ட­தாக நெல்­லி­கல தேரர் தெரி­வித்­தி­ருந்தார். இதன் நிர்­மாணப் பணி­க­ளுக்கும் இலங்கை இரா­ணுவம் மற்றும் சிவில் பாது­காப்பு படை ஆகி­ய­வற்றின் முழு­நேர பூர­ண­ ஒத்­து­ழைப்பும் கிடைக்கப் பெற்­றது. 2022 வெசாக் தினத்தின் போது (மே 7) அப்­போ­தைய இரா­ணுவத் தள­பதி சவேந்­திர சில்­வா­வினால் புன­ர­மைப்பு செய்­யப்­பட்ட கூர­கல உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திறந்­து­வைக்­கப்­பட்­டது.

பள்ளிவாசலுக்கு மேலே பறக்கும் பெளத்த கொடி…

திறந்­த­வெ­ளியில் இருந்து நேராக சென்று மேலே ஏறினால் 40 அடி உய­ர­மான தூபியை காண முடியும். அங்­கி­ருந்து வலது புறத்­திலே ஒரு மிகப்­பெ­ரிய பௌத்த கொடி மலைக்கு மேலே அசைந்து கொண்­டி­ருக்­கின்­றது. எனக்கு அருகில் இருந்த ஒரு வயோ­திப பௌத்த மத சகோ­தரர் அவ­ரு­டைய வயது முதிர்ந்த மனை­வியை நோக்கி ஒரு பெரு­மி­தத்­துடன் “அங்கே பார், முஸ்லிம் பள்­ளிக்கு மேலே அந்த பௌத்த கொடி நடப்­பட்­டுள்­ளது” இப்­பள்­ளி­வா­சலை இல­குவில் அடை­யாளம் காண்­ப­தற்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்த மினாரா (வர­வேற்பு கோபுரம்) கடந்த வருடம் பல­வந்­த­மாக உடைக்­கப்­பட்­டது. அந்த இடத்­திலே இன்று ஒரு மிகப்­பெ­ரிய பௌத்த கொடி பறந்து கொண்­டி­ருக்­கின்­றது.

முஸ்லிம் கடை­க­ளுக்கு செல்ல விடாமல் தடுக்­கின்ற இரா­ணு­வத்­தினர்

விகா­ரையை முழு­மை­யாக பார்­வை­யிட்டு கீழே இறங்கும் போது வல­து­பு­றத்­திலே மிக உய­ர­மான மதில்கள் கட்­டப்­பட்­டி­ருந்­தன. அந்த மதில்­க­ளுக்கு வெளியே இருந்து ஒரு சில வியா­பா­ரிகள் தண்ணீர் போத்­தல்­க­ளையும் ஐஸ்­கி­ரீம்­க­ளையும் விற்­பனை செய்து கொண்­டி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. அவர்­க­ளு­டைய கடைகள் பாதை­யோ­ர­மாக இருந்­தாலும் கொஞ்சம் பதற்­றத்­துடன் தான் அங்கே அவர்கள் பொருட்­களை விகா­ரையில் இருந்து கீழே இறங்­கு­கின்ற சிங்­க­ள­வர்­க­ளுக்கு விற்றுக் கொண்­டி­ருந்­தார்கள். மிகவும் களைப்­பாக இருந்­ததால் நாங்கள் கீழே சென்று பிர­தான பாதையின் ஊடாக அந்த கடைகள் இருக்­கின்ற பக்­கத்­திற்கு வந்தோம். அப்­போது இரா­ணு­வத்­தி­னரால் அந்தப் பாதை மூடப்­பட்டு ஆயுதம் ஏந்­திய ஒரு இரா­ணுவ வீரன் உங்­களை மேலே உள்ள முஸ்லிம் கடை­க­ளுக்கு செல்ல அனு­ம­திக்க முடி­யாது என மறுத்தார்.

ஏன் செல்ல முடி­யாது ?

உங்­களை அனுப்­பினால் தேரர் எமக்­குத்தான் ஏசுவார் !!

அங்கே இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு கட்­ட­ளை­யி­டு­வது கூர­கல விகா­ரை­யினை அமைத்த நெல்­லி­கல தேரர்!

நாங்கள் ஊட­க­வி­ய­லா­ளர்கள் என குறித்த இரா­ணுவ வீர­னிடம் தெரி­வித்த பின்­னரே எங்­களை அவர் முஸ்லிம் கடைகள் உள்ள பகு­திக்கு அனுப்­பினார். அங்கே சென்­றதும் நான் கேட்ட கேள்வி, ஏன் எங்­களை வர­வி­டாமல் தடுத்­தார்கள்.

“உங்­களை மட்­டு­மல்ல விகா­ரைக்கு வரு­கின்ற எவ­ரையும் எங்கள் கடை­க­ளுக்கு வர அனு­ம­திக்க மாட்­டார்கள். ஏன் என்று கேட்டால் ‘நீங்கள் பல வரு­டங்­க­ளாக பள்­ளிக்கு வரு­கின்ற முஸ்­லிம்­க­ளிடம் இருந்து சம்­பா­தித்து விட்­டீர்கள். இனிமேல் விகா­ரைக்கு வரு­கின்ற பௌத்­தர்­க­ளி­ட­மி­ருந்து பௌத்த வியா­பா­ரிகள் சம்­பா­திக்­கட்டும். உங்­க­ளுக்கு நாங்கள் சம்­பா­திக்க இடம் தர மாட்டோம்” எனக் கூறி­னார்­களாம்.

இது பற்றி நாங்கள் இரா­ணுவ ஊடக பேச்­சாளர் பிரி­கே­டியர் ஐ.எச்.எம்.ஆர்.கே ஹேரத்­திடம் வின­வினோம். அது பற்றி ஆராய்ந்து பதில் தரு­வ­தாக கூறி இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பகு­திக்கு பொறுப்­பான இரா­ணுவ பொறுப்­ப­தி­கா­ரியிடம் தாம் வின­வி­ய­தா­கவும் அவர் அத்­த­கைய தடுப்­புக்கள் எதுவும் அங்கே இல்லை என தமக்கு கூறி­ய­தா­கவும் பிரி­கே­டியர் ஐ.எச்.எம்.ஆர்.கே. ஹேரத் கூறினார்.

நாங்கள் குறித்த கடைக்குச் சென்று ஒரு குவளை தண்­ணீரை குடிப்­ப­தற்கு முன்­னரே மதி­லோ­ர­மாக ஐஸ்­கிரீம் விற்றுக் கொண்­டி­ருந்த, அந்தக் கடையின் உரி­மை­யா­ளரின் மகன் கையில் இருந்­த­வற்றை தூக்கிக் கொண்டு “ரங்க வரு­கிறான், ரங்க வரு­கிறான்” என்­ற­வாறு கூறிக்­கொண்டு கடைக்­குள்ளே ஓடி வந்து ஒளிந்து கொண்டான்.

யார் அந்த “ரங்க”

கூர­கலை விகா­ரையில் மஞ்சள் நிறத்தில் டீசேர்ட் அணிந்த கிட்­டத்­தட்ட 20 காவ­லா­ளிகள் எப்­போதும் இருப்­பார்­களாம். அவர்­களின் தலைவன் போல் இருப்­பவன் தான் ரங்கா. நாங்கள் முத­லிலே மேலே சென்­ற­போதும் அவர்­கள்தான் விகா­ரைக்கு வரு­கின்ற பக்­தர்­களை வழி நடத்­தி­னார்கள். அவர்கள் முஸ்லிம் கடை­க­ளுக்கு வரு­கின்ற சிங்­க­ள­வர்­களை விரட்­டு­வ­தோடு மதி­லோ­ர­மாக பொருட்­களை விற்­பனை செய்­கின்ற முஸ்­லிம்­க­ளுக்கு ஏசு­வதை நாங்கள் அவ­தா­னித்தோம். நாம் அங்கே செல்­வ­தற்கு இரண்டு நாட்­க­ளுக்கு முன்­பாக சிங்­க­ள­வர்­க­ளுக்கு பொருட்­களை விற்­பனை செய்த கார­ணத்­திற்­காக அவர்கள் உடைத்து நொறுக்­கிய கடை ஒன்றை அங்­கி­ருந்த ஒருவர் எங்­க­ளுக்கு காட்­டி­னார்கள். நாம் அங்கே கடைக்குள் உட்­கார்ந்­தி­ருக்கும் அதே நேரம் அங்கு வியா­பாரம் செய்து கொண்­டி­ருந்த முஸ்­லிம்­களை மஞ்சள் நிற டி ஷர்ட் அணிந்த காவ­லா­ளிகள் மிகவும் இழி­வான முறையில் மிரட்­டு­வ­தையும் நாம் கண்டோம்.

தகர்க்கப்பட்டுள்ள முஸ்லிம் நபருக்கு சொந்தமான வியாபார நிலையம்…

“இது இன்று நேற்று நடக்­கின்ற ஒரு விடயம் அல்ல. கிட்­டத்­தட்ட ஒரு வரு­ட­மாக இந்த பாதையை இரா­ணு­வத்­தினர் மூடியே உள்­ளனர். எந்த ஒரு வாக­னத்­திற்கும் மேலே வரு­வ­தற்கு அனு­மதி இல்லை. எங்­களை இங்­கி­ருந்து விரட்­டு­வது தான் அவர்­க­ளு­டைய முழு முயற்­சி­யாக இருக்­கின்­றது. எங்­க­ளு­டைய கடை­க­ளுக்கு மேலே பின்னால் இருக்­கின்ற மரங்­களை வெட்டி வீழ்த்­தி­னார்கள். தினமும் தொல்லை தரு­கின்­றார்கள். எனக்கு மட்­டு­மல்ல என்­னு­டைய மனை­வி­யையும் மிகவும் கேவ­ல­மான முறையில் அவர்கள் ஏசு­கின்­றார்கள். நாங்கள் பொலிசா­ரிடம் முறைப்­பாடு செய்தால் நீங்கள் இங்­கி­ருந்து சென்று விடுங்கள் என அவர்­களும் எமக்கு கூறு­கின்­றார்கள் என தனது அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்த விரும்­பாத ஒரு முஸ்லிம் சகோ­தரர் இவ்­வாறு கூறினார். அவர் மட்­டு­மல்ல அந்த கடை­களில் இருந்த எவ­ருமே தம்மு­டைய அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்த விரும்­ப­வில்லை. “நீங்கள் இந்தக் கதை­களை கேட்­டு­விட்டு சென்று விடு­வீர்கள். நாங்கள் தான் அதன் பிறகும் அடி­பட வேண்டும். எங்­க­ளு­டைய உயி­ருக்கே இப்­போது உத்­த­ர­வாதம் இல்லை” என்றார் அவர்.

ஐசி­சி­பிஆர் “ICCPR” வலை

அர­சியல் அமைப்புச் சட்­டத்தில் அடங்­கப்­ப­டா­துள்ள மனித உரி­மை­களை பாது­காப்­ப­தற்­காக 2007ஆம் ஆண்டு முதல் இலங்­கையில் ஐசி­சி­பிஆர் எனப்­ப­டு­கின்ற “அனைத்­து­லக குடிசார் மற்றும் அர­சியல் உரி­மைகள் உடன்­ப­டிக்கை” சட்டம் செயற்­பட்டு கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் அண்­மைய காலங்­க­ளாக இந்த சட்­டத்தை அரசு மக்­களின் கருத்துச் சுதந்­தி­ரத்தை ஒடுக்­கு­வ­தற்­கா­கவும் தனிப்­பட்ட பழி­வாங்­கல்­க­ளுக்­கா­கவும் பயன்­ப­டுத்­து­வதை நேர­டி­யா­கவே நாங்கள் அவ­தா­னித்து வரு­கின்றோம். சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா, எழுத்­தாளர் சக்­திக சத்­கு­மார, கவிஞர் அஹ்னாப் ஜெசீம் மற்றும் அண்­மையில் கைது செய்­யப்­பட்ட நகைச்­சுவை கலைஞர் நடாசா எதி­ரி­சூ­ரிய போன்ற பல­ரையும் கைது செய்து சிறையில் அடைக்க பொலிசார் பயன்­ப­டுத்­திய ஐசி­சி­பிஆர் என்ற சட்டம் தான் முஸ்லிம் கிரா­மத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் வியா­பா­ரிக்கு எதி­ராக கடந்த ஆண்டு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

கடந்த நாற்­பது வரு­டங்­க­ளாக கூர­கல பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் வியா­பாரம் செய்து வரும் அவர் தனக்கு நேர்ந்த அநீ­தியை இவ்­வாறு கூறினார். ‘‘கடந்த ஆண்டு நோன்பு காலத்தில் திடீ­ரென தனது கடைக்கு வந்த பொலிசார் வாக்­கு­மூலம் ஒன்றை பெறு­வ­தற்­காக “கல்­தொட” காவல் நிலை­யத்­திற்கு வரு­மாறு கூறினர். அங்கே சென்று பல மணி நேரம் நான் காத்துக் கிடந்தேன். அதன் பின்னர் ‘ஜீர­ரத்ன” என்ற உப பொலிஸ் அதி­காரி என்­னிடம் வாக்­கு­மூலம் ஒன்­றினை பெற்­றது போல் ஏதோ எழுதி கையொப்பம் ஒன்­றையும் பெற்றுக் கொண்டார். பொலி­சாரை நம்பி நானும் கையெ­ழுத்­திட்டேன். பின்னர் காலையில் என்னை பலாங்­கொடை நீதி­மன்­றத்தில் ஆஜர்படுத்தி 28 நாட்கள் குரு­விட்ட சிறைச்­சா­லையில் அடைத்து வைத்­தார்கள். அதன் பின்னர் தான் எனக்குத் தெரிய வந்­தது ஏதோ ICCPR என்ற சட்­டத்தின் மூலம் என்னை கைது செய்­துள்­ளார்கள் என்று. அவர்கள் எனக்கு எதி­ராக முன் வைத்­துள்ள குற்­றச்­சாட்டு, நான் இன்னும் ஒரு­வ­ருடன் சேர்ந்து ஜெய்­லானி பள்­ளியின் உண்­டி­யலை உடைத்தேன் என்­ப­தாகும். பள்­ளியில் தொழுது விட்டு வெளியே வரும்­போது, பள்­ளியின் தூசி கூட என் வீட்­டுக்கு வரக்­கூ­டாது என்று என் சாரத்தைக் கூட தட்டி விட்டுத் தான் நான் வருவேன். அப்­ப­டிப்­பட்ட எனக்கு எதி­ராக இது­போன்ற ஒரு குற்­றச்­சாட்டை முன்வைப்­பது மிகவும் வேத­னையை அளிக்­கின்­றது’’ என கூறும்போதே அவரின் கண்­களில் இருந்து கண்ணீர் கொட்­டி­யது.

இவ­ருக்கு எதி­ரான இந்த வழக்கு இன்னும் பலாங்­கொடை நீதி­மன்­றத்தில் வழக்கு எண் B159/2022 கீழ் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றது. மேலும் குறித்த பொலிஸ் நிலை­யத்தின் தலைமை பொறுப்பு அதி­கா­ரி­யாக கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த “தரங்க” என்ற அதி­கா­ரிக்கு எதி­ராக கொழும்­பி­லி­ருந்து விசா­ரணை ஒன்று நடந்து கொண்­டி­ருப்­ப­தா­கவும், ஐசி­சி­பிஆர் சட்­டத்தின் கீழ் வழக்கு பதி­யப்­பட்ட தன்னைத் தேடி கொழும்­பி­லி­ருந்து ஒரு குழு வந்து வாக்­கு­மூலம் ஒன்­றையும் பெற்றுச் சென்­ற­தாக அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பில் உதவி பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குண­சே­க­ர­விடம் நாம் வின­விய போது, இது தொடர்பில் ஆராய்ந்து எமக்கு அறி­விப்­ப­தாக கூறினார்.

கூர­கல தஞ்­சந்­தென்ன கத்­தோ­லிக்க மக்கள் என்ன சொல்­கி­றார்கள்?

கூர­கல விகாரை மற்றும் ஜெய்­லானி பள்­ளி­யி­லி­ருந்து சுமார் ஒரு கிலோ­மீற்றர் தொலைவில் உள்ள தஞ்­சந்­தன்ன கத்­தோ­லிக்க தேவா­ல­யத்­திற்கு நாங்கள் சென்றோம். அங்­கி­ருந்த கத்­தோ­லிக்க மக்­க­ளிடம் நாங்கள் கலந்­து­ரை­யா­டினோம்.

“இந்த கிரா­மத்தில் கத்­தோ­லிக்­கர்கள், பௌத்­தர்கள் மற்றும் முஸ்­லிம்கள் வாழ்­கின்­றனர். நான் அறிந்த வகையில் நாங்கள் எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்­லா­ம­லேயே நீண்ட நாட்­க­ளாக வாழ்ந்து வந்தோம். ஆனால் ஞான­சார தேரர் 2013 ஆம் ஆண்டு இங்கே வந்து பெரும் பிரச்­சி­னையை உரு­வாக்­கினார். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்­ச­மாக பிரச்­சி­னைகள் ஏற்­பட தொடங்­கி­யது. எனது தந்தை கூறி­யதன் படி இங்கே முஸ்­லிம்கள் தான் முதலில் இருந்­துள்­ளார்கள். அந்த காலத்தில் சிங்­க­ள­வர்கள் யாரும் அங்கே செல்­வ­தில்லை என அவர் கூறி­யுள்ளார்”

உண்­மையைச் சொல்­வ­தாயின், இக்­கி­ரா­மத்தில் சிங்­கள மக்­க­ளுக்கு எப்­போதும் முஸ்­லிம்கள் பயந்­த­வர்­க­ளா­கவே இருந்­தார்கள். எங்­க­ளுக்கு தெரிந்த வரையில் அவர்கள் மிகவும் அமை­தி­யாக இருந்­தார்­களே தவிர நீங்கள் சொல்­வது போல் சிலை­களை உடைத்து எதையும் அழிக்­க­வில்லை. ஒரு­முறை எங்கள் ஆல­யத்­திற்கு வந்­தி­ருந்த சகோ­த­ரிகள் இருவர் கூர­கல விகா­ரைக்கு செல்ல வேண்டும் என ஆசை­யுடன் அங்கே சென்­றார்கள். அப்­போது அவர்கள் தண்ணீர் போத்­தல்­களை வாங்க மேலே கடை­க­ளுக்கு செல்லும் போது அவர்­களை இரா­ணு­வத்­தினர் செல்ல விடாமல் தடுத்­துள்­ளார்கள். அப்­போது அந்த சகோ­த­ரிகள் நாங்கள் எந்­த­வொரு கல­வ­ரத்­திற்கும் செல்­ல­வில்லை இரண்டு தண்ணீர் போத்­தல்­களை வாங்­கத்தான் செல்­கின்றோம் எனக் கூறியும் அவர்­களை இரா­ணு­வத்­தினர் செல்ல விடாமல் தடுத்­தார்­களாம். இதி­லி­ருந்தே உங்­க­ளுக்கு புரிந்து கொள்ள முடியும் அங்கே என்ன நடக்­கின்­றது என்று”

50 வருட போராட்­டத்தின் வெற்­றியா கூர­கல?

நெல்­லிக்­கல தேரர் ஏறு­கின்ற எல்லா மேடை­க­ளிலும் உரத்த குரலில் கூறு­கின்ற ஒரு விடயம் தான், “ஐம்­பது வரு­ட­காலப் போராட்­டத்தின் மூலம் தாம் வென்­றெ­டுத்த இடம் கூர­கல விகாரை” என்பதாகும். இது குறித்து தஞ்­சந்­தன்ன பிர­தேச கத்­தோ­லிக்க மக்­க­ளிடம் நாம் வின­விய போது அவர்கள் “இது முற்­றிலும் போலி­யான ஒரு வாதம். அவர் இங்கே வந்­த­போது மக்கள் யாரும் அவரை எதிர்க்­க­வில்லை. அவர் கூறி­யது போல் இரண்டு வரு­டங்­களில் இதனை செய்து முடித்தார். அவர் உண்­மை­யி­லேயே இந்த ஊரை முன்­னேற்றி இருக்­கின்றார்.

ஆனால் அவர் கூறு­கின்ற சில விட­யங்கள் நமக்கும் ஒரு சில எங்­க­ளு­டைய பௌத்த நண்­பர்­க­ளுக்கும் மிகவும் மன வருத்­தத்தை அளிக்­கின்­றது. உண்­மை­யி­லேயே மிகவும் அமை­தி­யா­கவும் ஒற்­று­மை­யு­டனும் வாழ்ந்து வந்த இந்த ஊர் முஸ்லிம் சிங்­கள மக்­க­ளு­டைய ஒற்­று­மையை அவர் சீர்­கு­லைத்­துள்ளார்”

அத்­துடன் தேரர் மேடை­களில் அடிக்­கடி கூறு­கின்ற ஒரு விடயம் தான் முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து இந்த காணி­களை பணம் கொடுத்து நான் வாங்­கி­யுள்ளேன் என்­பது. இது பற்­றியும் நாங்கள் ஊர் மக்­க­ளிடம் கேட்டோம். “அது முற்­றிலும் பொய். ஒரு சில­ரிடம் மாத்­தி­ரமே காசு கொடுத்து அவர் காணி­களை வாங்­கினார். அதுவும் குளம் ஒன்றை கட்­டு­வ­தற்கு. வேறு எவரும் எதையும் விற்­கவும் இல்லை வாங்­கவும் இல்லை”

இது பற்றி நெல்­லி­கல தேரர் கூறு­வது என்ன ?

நீண்ட சிர­மத்­துக்கு மத்­தியில் நாங்கள் நெல்­லிக்­கல தேர­ரிடம் இந்த குற்­றச்­சாட்­டுகள் பற்றி வின­வினோம். முத­லிலே அவர் அங்கே கடை வைத்­தி­ருக்­கின்ற முஸ்லிம் வியா­பா­ரிகள் மிகவும் மோச­மான முறையில் தமது வியா­பார நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக கூறி­னார்கள். குறிப்­பாக அதிக விலைக்கு பொருட்­களை விற்­பனை செய்­வ­தா­கவும் போதைப் பொருட்­களை விற்­பனை செய்­வ­தா­கவும் அவர் கூறினார். அத­னா­லேயே தான் அங்கே விகா­ரைக்கு வரு­ப­வர்­க­ளுக்கு வியா­பாரம் செய்­யக்­கூ­டாது என தடை விதித்­த­தாக கூறினார். மேலும் தான் அந்த முஸ்லிம் கிரா­மத்­துக்கு எந்த ஒரு இன மத வேறு­பாடும் இன்றி உதவி செய்­வ­தா­கவும் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் அதே போன்று கற்றல் உப­க­ர­ணங்­களை வழங்கி உதவி செய்­துள்­ள­தா­கவும் கூறினார். ஆனாலும் அவ்வூர் முஸ்­லிம்கள் முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ரமே எப்­போதும் உதவி செய்­ப­வர்­க­ளாக இருப்­ப­தா­கவும் அவர்கள் எப்­போதும் பெரும்­பான்மை மக்­களை விட்டு விலகிச் செல்ல முற்­ப­டு­வ­தா­கவும் குற்றம் சாட்­டினார்.

அத்­துடன் விகா­ரையை அமைப்­ப­தற்கு முன்னர் தாம் ஜம்­இ­யத்துல் உல­மா­விடம் சென்று இது பற்றி கலந்­து­ரை­யாட முயற்சி செய்­த­போது அவர்கள், ‘ஜெய்­லானி என்­பது மர­ணித்­த­வர்­களை வணங்கி வழி­ப­டு­கின்ற ஒரு பள்­ளி­வாசல். அவர்­களைப் பற்றி எமக்கு எதுவும் தெரி­யாது. நீங்கள் வக்பு சபை­யுடன் தான் அது­பற்றி பேச வேண்டும்’ என கூறி­னார்கள்.

நாங்கள் இது பற்றி ஜம்இ­­ய்யத்துல் உல­மா­விடம் வின­விய போது, தேரர் கூறி­யதை முற்று முழு­தாக மறுத்­தனர். குறித்த தேரர் ஜம்­இய்­யத்துல் உல­மா­விடம் இது பற்றி கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக வருகை தந்­த­தா­கவும் அந்த சந்­தர்ப்­பத்தில் கலந்­து­ரை­யா­டலை ஆரம்­பிப்­ப­தற்கு முன்­னமே, சூபி முஸ்­லிம்கள் சிலை வணங்­கு­ப­வர்­களா? அவர்கள் முஸ்­லிம்கள் இல்­லையா? போன்ற கேள்­வி­களை கேட்­ட­தா­கவும் உலமா சபை முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிர­தி­நி­திகள் “அப்­படி எதுவும் இல்லை. இறந்­த­வர்­க­ளையும் கப்­ரு­க­ளையும் பரா­ம­ரிப்­பது இஸ்­லாத்தில் சுன்­னா­வாகும். அதனை நாங்கள் மறுக்க மாட்டோம். அவர்­களும் முஸ்­லிம்கள் தான்” என கூறி­னோம்.

அதன் பின்னர் நெல்­லி­கல தேரர் தமது சொந்த செலவில் அங்கே வேறு ஒரு இடத்தில் புதிய பள்ளி ஒன்றை நிர்­மா­ணிக்க உள்­ள­தா­கவும் மேலும் அங்கே வழக்கு ஒன்று சென்று கொண்­டி­ருப்­ப­தா­கவும் கூறி­னார். அதற்கு பதில் கொடுத்த ஜம்­இய்­யத்துல் உலமா அங்கே வழக்கு ஒன்று சென்று கொண்­டி­ருப்­பதால் தங்­களால் எதையும் செய்ய முடி­யாது எனவும் இது வக்பு சபை எடுக்க வேண்­டிய முடிவு எனவும் கூறி­ய­து என எம்மிடம் பேசிய உலமா சபை முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.

ஊர்­மக்கள் கூறு­கின்ற விட­யங்­களை முற்­று­மு­ழு­தாக மறுத்த நெல்­லிக்­கல தேரர் அவ்­வா­றான எந்த ஒரு விட­யமும் தனக்கு இது­வரை அறிய கிடைக்­க­வில்லை என கூறினார். அத்­துடன் முஸ்­லிம்­க­ளுடன் தனிப்­பட்ட ரீதியில் தனக்கு எந்­த­வித கோபமும் இல்லை எனவும் கூறினார்.

இலங்­கையில் தற்­போது நடை­மு­றையில் உள்ள சட்­டத்தின் படி தொல்­பொருள் பெறு­மதி வாய்ந்­த­தாக பாது­காக்­கப்­பட வேண்­டிய பொருட்கள் கட்­ட­டங்கள் அனைத்தும் குறைந்­த­பட்சம் 100 ஆண்­டு­க­ளுக்கு மேற்­பட்­ட­தாக இருக்க வேண்டும். அதன் அடிப்­ப­டையில் கூர­கலை பள்­ளி­வாசல் சம்­பந்­த­மான பிரச்­சினை 2015ஆம் ஆண்­டு­களில் வரும் போது அந்தப் பள்­ளி­வாசல் கட்­டப்­பட்­டி­ருப்­பது 1922ஆம் ஆண்டில் என்­பதால் அது தொல்­பொருள் அல்ல, என்ற நிலைப்­பாட்­டிற்கு தொல்­பொ­ரு­ளி­ய­லா­ளர்கள் வந்­த­தாக தனது பெயரை குறிப்­பிட விரும்­பாத களனி பல்­க­லைக்­க­ழ­கத்தின் தொல்­லியல் முது­கலை விரி­வு­ரை­யாளர் ஒருவர் கூறினார்.

அத்­துடன் 2015 ஆம் ஆண்டு கல்­தொட கூர­கல ஆகிய பிர­தே­சங்­களில் தொல்­லியல் முது­கலை நிறு­வனம் மேற்­கொண்ட ஆய்­வு­களில் பின்னர் வெளி­யி­டப்­பட்ட “Kaltota Survey – Phase 1” நூலில் மிகவும் தெளி­வாக கூர­கல மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­களில் காணப்­ப­டு­கின்ற தொல்­பொருள் ஆராய்ச்­சிகள் மற்றும் அதன் முடி­வுகள் பற்றி குறிப்­பி­டப்பட்டுள்ளது. குறிப்­பாக 2012- , 13 ஆம் ஆண்­டு­களில் மேற்­கொண்ட அகழ்­வா­ராய்ச்­சி­களின் போது ஜெய்­லானி பள்­ளிக்கு அரு­கா­மையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட மனித எலும்­பா­னது இன்­றைக்கு 8000 வரு­டங்கள் பழை­மை­யா­னது என காலக் கணிப்பு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அந்த ஆராய்ச்­சி­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் தொல்­பொருள் பெறு­மதி வாய்ந்த பிர­தே­ச­மாக பெய­ரி­டப்­பட்­டுள்ள எந்­த­வொரு இடத்­திலும் புதி­தாக எந்­த­வொரு கட்­டு­மா­னத்­தையும் மேற்­கொள்ள முடி­யாது என மிகத் தெளி­வாக களனி பல்­க­லைக்­க­ழ­கத்தின் தொல்­லியல் முது­கலை நிறு­வன பேரா­சி­ரியர் கூறினார். ஆகவே அங்கே புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள மிகப்­பெ­ரிய விகா­ரையும் ஏனைய கட்­டு­மா­னங்­களும் எவ்­வாறு யாரு­டைய அனு­ம­தி­யுடன் மேற்­கொள்­ளப்­பட்ட நிர்­மா­ணிப்­புகள் என்­பது மிகப்­பெ­ரிய கேள்­விக்­குறியே.

அங்கே சென்று அங்கே நடக்­கின்ற விட­யங்­களை கண்­களால் கண்ட ஒரு­வ­ராக என்னால் கூற முடியும், ஒரு பெரும்­பான்மை சமூகம் சிறு­பான்மை மக்­க­ளு­டைய வர­லாற்­றையும் இருப்­பையும் அழிக்­கின்­றார்கள். பல வரு­டங்­க­ளாக முஸ்­லிம்கள் வணங்கி வந்த ஒரு வணக்­கஸ்­த­லத்தை இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் பெரும்­பான்மை அரசும் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த பௌத்த பிக்­கு­களும் சேர்ந்து ஆக்­கி­ர­மித்­துள்­ளார்கள். இலங்கை பூரா­கவும் இன்­ற­ளவில் அரங்­கேறிக் கொண்­டி­ருக்­கின்ற சிறு­பான்­மை­யி­னரின் பூர்­வீ­கங்கள் கைப்­பற்­றப்­ப­டு­வதன் ஓர் அங்­க­மா­கவே இதனை நான் காண்­கின்றேன். இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் முஸ்லிம் சமூ­கத்தின் இருப்பு என்­பது தற்­போது மிகப்­பெ­ரிய கேள்­விக்­கு­றி­யாக மாறியுள்­ளது. அந்த இருப்பை உறுதி செய்­கின்ற விட­யங்­க­ளா­கவே இது போன்ற பழைய பள்­ளி­களும் அவு­லி­யாக்­களின் ஸியா­ரங்­களும் காணப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்­களின் வர­லாற்றை பறை­சாற்­று­கின்ற வர­லாற்றுத் தளங்­க­ளாக காணப்­ப­டு­கின்ற இது போன்ற இடங்கள் அழிக்­கப்­ப­டு­வதை நாங்கள் கண்டும் காணா­தது போல் இருந்தால் நிச்­ச­ய­மாக நாமும் முஸ்லிம் சமூ­கத்தின் அடை­யாள அழிப்­புக்கு ­துணை போனவர்­க­ளாக மாறி­வி­டுவோம். முஸ்லிம் சமூ­கத்­திற்கு உள்­ளேயே மதத்தை எவ்­வாறு பின்­பற்­று­வது என்பது தொடர்பில் காணப்­ப­டு­கின்ற முரண்­பா­டுகள் மேலும் இவற்றை அழிப்­ப­தற்கு மறை­மு­க­மாக ­துணை செய்­கின்­றன. மேலும் முஸ்லிம் சமூ­கத்தில் காணப்­ப­டு­கின்ற பன்­மைத்­தன்மை என்ற விடயம் இல்­லாமல் ஆக்­கப்­படும் அபா­யமும் உள்­ளது. அதன் பின்னர் சிங்­கள இன­வா­தி­களால் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­ப­டு­கின்ற குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்தும் உண்மை என்ற நிலை ஏற்­ப­டலாம் என மனித உரி­மைகள் செயற்­பாட்­டாளர் சிரீன் அப்துல் சரூர் கூறினார்.

பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தின் விரி­வு­ரை­யாளர் கல்ப ராஜ­பக்‌ஷ உடன் நாம் இது­பற்றி கலந்­து­ரை­யா­டி­ய­போது அவர் இவ்­வாறு கூறினார். அண்­மையில் காலம் சென்ற பிர­பல பிரெஞ்சு எழுத்­தாளர் மிலன் குந்­தேரா கூறி­யது போன்று “நாம் செய்­கின்ற சகல போராட்­டங்­களும், மறக்­க­டிக்­கப்­ப­டு­வ­தற்கும் மறுக்­கப்­ப­டு­வ­தற்கும் எதி­ராக இருக்க வேண்டும். அதா­வது அரசும் ஆட்­சி­யா­ளர்­களும் எடுத்த பிழை­யான முடி­வுகள் கார­ண­மாக மனித குலம் முகம்­கொ­டுத்த பிரச்­சி­னைகள் மறக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக எம்­மு­டைய போராட்­டங்கள் இருக்க வேண்டும்” என்றார்.

நீங்கள் கூறிய இந்த விட­யமும் மிலன் குந்­தேரா கூறி­யது போன்ற ஒன்­றாகும்.

‘‘நான் இலங்­கையில் தற்­போது காண்­கின்ற இந்த கான்­கிரீட் பௌத்த மத­மா­னது மிகப்­பெ­ரிய ஒரு அர­சியல் லாபத்­துக்­கா­கவும் சமூ­கத்தில் ஒரு வகுப்பை மாத்­திரம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி அவர்­க­ளு­டைய முத­லீ­டு­க­ளுடன் நடத்­தப்­ப­டு­கின்ற ஒரு வியா­பா­ர­மா­கவே நான் காண்­கின்றேன். இந்த சகல சம்­ப­வங்­க­ளுக்கும் பின்னால் காணப்­ப­டு­கின்ற மூல­த­னத்தை நீங்கள் ஆராயும் போது இந்த யதார்த்தம் உங்­க­ளுக்கு தெரிய வரும்’’ எனக் கூறினார்.

மேலும் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் வர­லாற்று பீட பீடா­தி­பதி பேரா­சி­ரியர் நிர்மல் ரஞ்சித் தேவ்­சிரி இந்தக் “கூர­கல” விடயம் பற்றி குறிப்­பிடும் போது,

இது மிகவும் சிக்­க­லான ஒரு அர­சியல் பிரச்­சி­னை­யாகும். இதிலே காணப்­ப­டு­கின்ற அர­சியல் மிகவும் ஆபத்­தா­னது. அனைத்து மதங்­க­ளி­னதும் மதத் தலை­வர்­க­ளு­டைய ஒரு கனவு தனக்­கென ஒரு அடை­யா­ளத்தை சமூ­கத்தில் உரு­வாக்கிக் கொள்ள வேண்டும் என்­பது. எனவே அதற்­காக அவர்கள் தெரிவு செய்­கின்ற ஒரு எளிய விடயம் மத வழி­பாட்டு தலங்­களை உரு­வாக்­கு­வ­தாகும்.

கூர­க­ல­விற்கு முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ செல்­வதும் அதன்­பின்னர் இந்த இடங்­களை திரும்­பவும் பௌத்­தர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்து சமூ­கத்தில் பரப்­பப்­ப­டு­வதும் பிறகு பிரச்சினைகள் உருவாவதும் ஒரு அரசியல். இலங்கை போன்ற ஒரு நாட்டில் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த ஒரு இடத்திற்கு சுற்றுலாக்காக செல்வது என்பது சாதாரணமான ஒரு விடயம் அல்ல. சாதாரண மக்கள் ஏனைய சுற்றுலா தளங்களை தரிசிப்பதை விட இது போன்ற இடங்களுக்குச் செல்வதை அதிகம் விரும்புவார்கள். குறிப்பாக இது போன்று பாரிய போராட்டங்களின் பின்னர் முஸ்லிம்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இடம் அல்லது மத வழிபாட்டுத்தலங்கள் என்பவற்றை பார்வையிடுவதை மக்கள் அதிகம் விரும்புவார்கள். இன்னும் சரளமாக கூறினால், மனதை பதற வைக்கின்ற உடல் நடுக்கத்தை ஏற்படுத்துகின்ற செய்திகளை மக்கள் அதிக ஆவலுடன் கேட்பார்கள். இந்த எல்லாவிதமான பிரச்சனைகள் காரணமாகவும் கடைசியில் அவதிப்படுவது சமூகத்தில் இருக்கின்ற ஒரு வகுப்பு சாரார் மாத்திரமே என பேராசிரியர் இறுதியாக கூறினார்.

முஸ்லிம் சமூகம் என்பது ஒரு பன்மைத் தன்மை வாய்ந்த சமூகம் என்ற விடயம் ஒரு சில முஸ்லிம்களாலேயே இன்று மறுக்கப்பட்டு நாங்கள் பொறுமைத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு முஸ்லிம்களே உதாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு ஒருபுறம் அழிக்கப்பட்டு வருகின்றது! முஸ்லிம்களின் இருப்பு மறுபுறம் மறுக்கப்பட்டு வருகின்றது! முஸ்லிம்களின் இளைஞர்களின் கல்வியும் எதிர்காலமும் இன்னொரு புறம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது! இந்த அனைத்துக்கும் மத்தியில் முஸ்லிம்களுக்குள்ளேயே மதத்தை எவ்வாறு பின்பற்றுவது என்பது பற்றி மிகப்பெரிய ஒரு முரண்பாடு !

இந்த கூரகல ஜெய்லானி பள்ளியின் இன்றைய அரசியலையும் எமது முஸ்லிம் சமூகம் அதனை காண்கின்ற விதத்தையும், 1937 இ-ல் ஜெர்மனில் ஹிட்லரின் ஆட்சியைப் பற்றி மார்டின் நிமோலர் (Martin Niemoller) எழுதிய இந்த உலகப்புகழ் பெற்ற வரிகளின் நினைவுபடுத்துகின்றது.

அவர்கள் முதலில் கம்யூனிஸ்ட்டுகளைத் தேடி வந்தார்கள்

நான் ஒன்றும் பேசவில்லை ஏனெனில்

நான் கம்யூனிஸ்ட் இல்லை

பின்னர், தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்

நான் ஒன்றும் பேசவில்லை ஏனெனில்

நான் தொழிற்சங்கவாதி இல்லை

அதற்குப் பின்னர், யூதர்களைத் தேடி வந்தார்கள்

நான் ஒன்றும் பேசவில்லை ஏனெனில்

நான் யூதன் இல்லை

அடுத்து, கத்தோலிக்கர்களைத் தேடி வந்தார்கள்

நான் ஒன்றும் பேசவில்லை ஏனெனில்

நான் கத்தோலிக்கன் இல்லை

கடைசியாக, என்னைத் தேடி வந்தார்கள்

எனக்காகப் பேச அப்போது யாருமே இல்லை.

விடிவெள்ளி-
சபீர் மொஹமட்-p

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *