ஒரே நாளில் 2200 நில அதிர்வுகள் பதிவு!

ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் ஒரே நாளில் 2,200 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையமான IMO உறுதிப்படுத்தியுள்ளது.

இதனால் எரிமலை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரித்துள்ளது.

ஃபக்ராடால்ஸ்ஃப்ஜால் (Fagradalsfjall) மலையின் கீழாக நில அதிர்வுகள் ஆரம்பித்துள்ளன. இதனையடுத்து, 24 மணித்தியாலங்களில் 2,200 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

இதுவரை எரிமலை வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை, என்றாலும் ஒன்றிரண்டு நாட்களில் நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *