இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பல இடங்கள் அடையாளம்!
இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பல பகுதிகளை அடையாளம் கண்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“எதிர்காலத்தில் இவ்வாறான அதிர்வுகள் ஏற்படக்கூடும். இவ்வாறான அதிர்வுகளால் நாம் பாதிக்கப்பட மாட்டோம். இலங்கையில் இவ்வாறான அதிர்வுகள் ஏற்படக்கூடிய பல பிரதேசங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
திருகோணமலையிலிருந்து உஸ்ஸங்கொடை வரையிலான செயலற்ற நிலத்தடி எல்லை, மத்திய மலையகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் என பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.