லொத்தர் சீட்டு விற்பனையில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

லொத்தர் சீட்டின் விலை உயர்த்தப்படுவதால் அதனை கொள்வனவு செய்வது குறைவடையலாம் என லொத்தர் விற்பனை பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக உயர்த்தவுள்ளதாக லொத்தர் சபைகள் நேற்று (29) அறிவித்தன.

இது தொடர்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை லொத்தர் விற்பனையாளா்கள் சங்கத்தின் தலைவர் கிருஷான் மரம்பகே, இந்த தீர்மானத்தினால் லொத்தர் கைத்தொழில் அழிவடையும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் லொத்தர் சீட்டு விற்பனைகளில் இருந்து விலகுவதற்கு லொத்தர் விற்பனையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

லொத்தர் சீட்டு விலை உயர்வை கண்டித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விற்பனையாளா்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *