இலங்கைக்கு அமெரிக்கா 39.6 மில்லியன் டொலர் மருந்துப் பொருட்கள் நன்கொடை!

ஐக்கிய இராச்சியத்தின் ஹெல்ப்லைன் லங்கா (Helpline Lanka ) ஊடாக 39.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்கள் இன்று (20) சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங், சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இந்த மருந்து உதவித் தொகையை வழங்கினார்.

இங்கு உரையாற்றிய சுகாதார அமைச்சர் திரு.கெஹலிய ரம்புக்வெல்ல,

இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு ஆதரவளித்து உதவிய அனைத்து நட்பு நாடுகளுக்கும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *