மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு கோரிக்கை!
கால்நடைகளுக்கு பரவும் தோல் முடிச்சுகளுடன் கூடிய நோய் மேல் மாகாணத்திலும் பரவி வருவதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் துரிதமாக செயற்பட வேண்டுமென சங்கத்தின் தலைவர் டொக்டர் சிசிர பியசிறி தெரிவித்தார்.
மேலும் நோய் கட்டுப்பாட்டிற்கு வரும் வரை மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.