திருமண வயதில் மகளை வைத்துக்கொண்டு தன் காதலனுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நதியா !
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக ஒரு காலத்தில் இருந்தவர் நதியா.மிகவும் முக்கியமான பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.
இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம்தான் சினிமாவுக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.அதன் பிறகு 1985ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
அதற்கு பிறகு உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்னத்தம்பி பெரியதம்பி, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை நதியா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
மேலும், 1988ஆம் ஆண்டு சிரிஷ் காட் போலே என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு சனம், ஜனா என்ற 2 மகள்கள் உள்ளார்கள். பின் நடிகை நதியா அவர்களின் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார்.
அதனை தொடர்ந்து எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகின்றார்.
நதியா உச்சத்தில் இருந்த சமயத்தில் முன்னணி நடிகரை காதலித்து வந்தது அனைவர்க்கும் தெரிந்ததுதான்.அந்த காதலரோடு இன்னும் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.தோலுக்கு மேல் பெண்ணை வைத்துக்கொண்டு இப்படி பண்றதா ??என ரசிகர்கள் கமெண்டுகளை வீசி வருகிறார்கள்.