தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தமிழ் நடிகர்!

 

தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான இவர் கண்ணீர் அஞ்சலி பேனரை வைத்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குனருமான ஜி.எம்.குமார் பாரதிராஜா இயக்கிய ‘கேப்டன் மகள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதன் பிறகு’தொட்டி ஜெயா’ ’வெயில்’ ’மலைக்கோட்டை’ ’குருவி’என பல படங்களில் தோன்றினாலும், பாலாவின் “அவன் இவன்” திரைப்படம்தான் அவரை பிரபலமாக்கியது.’அறுவடை நாள்’ ’பிக்பாக்கெட்’ ’இரும்பு பூக்கள்’ ’உருவம்’ போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜி.எம்.குமார் கண்ணீர் அஞ்சலி பேனரை கையில் வைத்திருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

மேலும் அவர் புகைப்படத்திற்கு “வாழ்க்கை ஆயிரம் கார்ட்டூன் வெளிப்பாடுகள்” என்று தலைப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *