பஸ் சாரதிக்கு திடீர் மாரடைப்பு மாணவர்களின் உயிரை காப்பாற்றிய 13 வயது சிறுவன்!

வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது, டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டபோது 13 வயது சிறுவன் துணிச்சலாக செயல்பட்டு பல மாணவர்களின் உயிரை காப்பாற்றிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பஸ் டிரைவர் ஒருவர் பள்ளி மாணவர்களை ஏற்றி பஸ்ஸை இயக்கி கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்படவே, இருக்கையிலேயே சாய்ந்தார். பஸ் தாறுமாறாக சாலையில் தறிக்கெட்டு ஓடியது.

பஸ் உள்ளே இருந்த மாணவர்கள் அலறி கூச்சல் போட்டுக்கொண்டிருந்தபோது, 13 வயது மாணவ சிறுவன் ஓடி வந்து பஸ்ஸை நிறுத்தினான். இந்த மாணவனால் பஸ்ஸில் பயணம் செய்த அனைத்து மாணவ குழந்தையின் உயிரை காப்பாற்றப்பட்டுள்ளது.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து, அந்த மாணவனுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *