சுனாமி ஏற்படக்கூடிய சக்திவாய்ந்த அணு ஆயுதத்தை தயாரித்தது வட கொரியா!

சுனாமியை ஏற்படுத்தும் அளவு சக்திவாய்ந்த நீருக்குள் சென்று தாக்குதல் நடத்தும் அணு ஆயுத ஆளில்லா விமானம் ஒன்றை வடகொரியா பரிசோதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.

இந்த ஆளில்லா விமானம் 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் 59 மணி நேர வேகத்தில் பயணித்து தாக்குதல் நடத்தும் அளவு சக்தி வாய்ந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆய்வாளர்கள் இந்த புதிய ஆயுதத்தின் திறன்கள் பற்றிய வட கொரியாவின் கூற்று குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் மறுபக்கம் வட கொரியாவும் அமெரிக்காவும் சேர்ந்து வரலாற்று சிறப்புமிக்க 05 வருட இராணுவ கூட்டுப்பயிற்சியை கடந்த புதன் கிழமை நிறைவுக்கு கொண்டுவந்தது.

இந்த ஆளில்லா விமானத்தை புலனாய்வு ஆயுதங்கள் கூட இலகுவில் கண்டறிய முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *