நடிகர் விஜய்யுடன் முற்றிய சண்டை கடைசியாக எச்சரித்த மனைவி!
நடிகர் விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் சண்டைப் போட்டுக் கொண்டதாகவும் இதனால் விஜயை கடுமையாக எச்சரித்ததாகவும் ஒரு தகவல் தற்போது தீயாய் பரவி வருகின்றது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர். விஜய் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்பவர்.
அதனாலும் கூட அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. அண்மையில் கூட விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி சூப்பராக ஓடி அதிக வசூலைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது விஜய் குடும்பம் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது. என்னதான் திரையில் பல ரசிகர்களைக் கொண்டு கொண்டாடி வந்தாலும் வீட்டில் எல்லோருக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது.
அவ்வாறு தான் நடிகர் விஜய்யிக்கும் அவரது தந்தைக்கும் பல பிரச்சினைகள் இருந்தது என சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் பரவி வந்தது.
அதுமட்டுமல்லாமல் சங்கீதாவுடன் விஜய் பிரிந்து வாழ்வதாகவும் பல தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் இந்த தகவல்கள் எல்லாம் உண்மையா என்பது இன்னும் புலப்படவில்லை.
தற்போது பிரபல நடிகர்களையும், நடிகைகளையும் பற்றி பல தகவல்களை தனது டுவிட்டர் பங்கம் செய்துக் கொண்டிருப்பவர் தான் திரைப்பட விமர்சகரும் சென்சார் குழுவின் உறுப்பினருமான உமர் சந்து.
இவர் அண்மையில் விஜய் மற்றும் சங்கீதா குறித்து ஒரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருக்கிறார்.
அதில் நடிகர் விஜய்யும் அவருடைய மனைவியும் கடந்த 19ஆம் திகதி சண்டைபோட்டு கொண்டதாக அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த சண்டை முற்றிக் கொண்டே போக சங்கீதா தனது கணவர் விஜய்யை இறுதியாக எச்சரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது