நாயை திருமணம் செய்து கொண்டு ஓடிய நபர்!
பிரித்தானியாவில் அண்மையில் மனைவிகளைத் தூக்கிக் கொண்டு கணவர்கள் ஓடும் விநோதமான போட்டியொன்று நடைபெற்றுள்ளது.
டோர்கிங் பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் பெரும்பாலான கணவர்கள் தங்களது மனைவிகளை குழந்தையைப் போன்று தோளில் சுமந்தவாறு வேகமாக ஓடினர்.
இந்நிலையில் குறித்த போட்டியில் பங்கேற்ற ஒருவர் தனது கையில் நாய்க்குட்டியொன்றைத் தாங்கியவாறு ஓடிய சம்பவம் மக்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர் ” தான் தனது நாயைத் திருமணம் செய்து கொண்டமையினாலேயே இவ்வாறு நாயைத்தூக்கிக்கொண்டு ஓடியதாக அவர் தெரிவித்துள்ளார்.