பேராதனை பல்கலைக்கழகத்தில் 700 மாணவர்களுக்கு மனநோய்!

பேராதனை பல்கலையில் சுமார் 700 மாணவர்களுக்கு மனநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானோர் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் போது மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று நிலைமை மற்றும் ஏனைய காரணங்களால் பல்கலைக்கழகங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளதனால் மாணவர்களின் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாணவர்கள் மனநோயாளிகளாக மாறியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *