இலங்கையில் முதன் முறையாக இரட்டையர் ஆழகுராணி,ஆணழகன் போட்டி!

இலங்கையில் முதல் முறையாக உலக இரட்டயர் அழகுராணி மற்றும் இரட்டயர் ஆணழகன் போட்டிகள் நடைபெறவுள்ளதாக இலங்கை இரட்டயர் அமைப்பின் நிறுவுனர் உபிலி கமகே நேற்று ஊடவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

உலகில் நடைபெறவுள்ள முதன்மையும் முதலாவதுமான நிகழ்வாக இது அமைந்துள்ளது.இன்றைய நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு இந் நிகழ்வு பெரும் பலமாக இருக்கும் என உபிலி கமகே தெரிவித்தார். அத்தோடு இலங்கையை ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

இந்நிகழ்வை முதல் கொண்டு
1. உலக இரட்டயர் கலாசார விழா
2. இரட்டயர் ஆழகுரானி சோடி மற்றும் இரட்டயர் ஆணழகன் சோடி
3. உலக இரட்டயர் சம்மேளனம்
4. உலக இரட்டயர் வர்த்தக மாநாடு

போன்ற நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந் நிகழ்வுகளில் உலக இரட்டயர் ஆழகுரானி மற்றும் இரட்டயர் ஆணழகன் போட்டிகள் அனைவரும் கவரும் நிகழ்வாக இருக்கப் போகிறது.இந்நிகழ்வுகளில் 30 நாடுகள் இது வரை கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளது. மேலும் அனேக நாடுகள் பங்கேற்க உள்ளன. வெளிநாடுகளில் இருந்து இரட்டயர்களுடன் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் என 4000 இற்கு மேற்பட்ட வௌிநாட்டினர் கலந்து கொள்கின்றனர்.இதனால் எமது நாட்டுக்கு டொலர் வருத்து அதிகரிக்க கூடும் என நம்புகிறோம்.

உலக இரட்டயர் ஆழகுரானி மற்றும் இரட்டயர் ஆணழகன் போட்டிக்காக இலங்கையிலிருந்து இரட்டயர் ஆழகுராணி மற்றும் இரட்டயர் ஆணழகன் 03 சோடிகளை தேர்ந்தெடுக்கும் இறுதி போட்டிகள் இலங்கையில் முதல் முதலாக பெப்ரவரி 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்காக முதல் கட்டபோட்டிகள் பெப்ரவரி 12 ஆம் திகதி நடைபெறவுள்ளன.

இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கு கொள்ள விரும்பும் இரட்டயர்கள் தங்களது விண்ணப்பங்களை பின்வரும் முகவரிக்கும் அல்லது வட்சப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும் 070 4644640.

WTG – செயலகம்
124D, வளவத்தை, 1ஆவது லேன்,
அபேரத்ன மாவத்தை,
பொரலஸ்கமுவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *