மக்கள் சட்டத்தை மறந்தால் பயணத்தடை தொடரும் சுகாதார தரப்பு எச்சரிக்கை!

” பயணக்கட்டுப்பாடுகளை மக்கள் மீறும்நிலை நீடித்தால் பயணத்தடையையும் நீடிக்கவேண்டிய நிலை ஏற்படும்.” – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் நேற்று தெரிவித்தார்.

” தனிமைப்படுத்தல் சட்டத்தையும், பயணக்கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் உரியவகையில் பின்பற்றுமாறு நாட்டு மக்களிடம் மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம். எனினும், சட்டத்திட்டங்களைமீறுச்செயற்படும் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன.

எனவே, பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் மக்கள் உரியவகையில் செயற்படுவார்களா என்ற அச்சநிலை உருவாகியுள்ளது. நடைமுறைகளை மக்கள் தொடர்ச்சியாக மீறினால் பயணக்கட்டுப்பாட்டை மேலும் ஒரு அல்லது இரு வாரங்களுக்கு பயணத்தடையை நீடிக்கவேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்படும். இதைவிட வேறுவழியில்லை.” – என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *