கொழும்பில் நடக்கும் சிறுநீரக மோசடி ஏமாறும் ஏழைகள்!

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இந்நாட்டில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் போலி ஆவணங்கள் மூலம் இந்த சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்று வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பணம் கொடுத்து சிறுநீரகம் பெற்ற சிலருக்கு பணம் கூட வழங்கப்படவில்லை என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *