உடல் ரீதியிலான  இடையூறுகளை தமக்கு விளைவித்ததாக ஹிருணிகா முறைப்பாடு!

ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவு தலைவி ஹிருணிகா பிரேமசந்ர உள்ளிட்ட 3 பெண்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி மருதானை எல்பிஸ்டன் திரையரங்கு அருகே இருந்து அரசாங்கத்தின் அடக்கு முறை செயற்பாட்டை உடனடியாக நிறுத்தக் கோரியும் , பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்ட பேரணி நடாத்தப்பட்டது.

இதன்போதே பொலிஸார் இவ்வாறு உடல் ரீதியிலான  இடையூறுகளை தமக்கு விளைவித்ததாக ஹிருணிகா உள்ளிட்ட சில பொலிசாரின் சீருடை இலக்கங்கள், வீடியோக்களையும் இணைத்து இந்த முறைப்பாட்டை முன் வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *