உயிரிழந்த பின்னரும் பிரித்தானிய பொருளாதாரத்தை உயர்த்திய ராணி

ராணியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் பிரித்தானியாவில் குவிந்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் நம்பிக்கை அளிப்பதாக மாறியுள்ளது.

மகாராணி எலிசபெத்தின் மரணம் பிரித்தானியர்கள் மட்டுமின்றி பல்வேறு நாட்டு மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து பலரும் ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரித்தானியாவுக்கு வருகின்றனர்.

முக்கியமாக அமெரிக்கர்கள், இந்தியர்கள் பிரித்தானியாவுக்கு வருகை தருகின்றனர். ராணியின் இறுதிச்சடங்கு நாளை (19/09/2022) நடக்கவுள்ள நிலையில் பார்வையாளர்களின் வருகை பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் மாற்றத்தை கொண்டு வருகிறது.

ஏனெனில் பிரித்தானியா பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் இறந்தும் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை ராணியார் உயர்த்தும் சூழல் அமைந்திருக்கிறது.

பார்வையாளர்கள் அதிகம் வருவதால் மத்திய லண்டனில் உள்ள ஹொட்டல் அறைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது, சில சந்தர்ப்பங்களில் அங்கு தங்குவதற்கான விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *