கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து மூவர் உயிரிழப்பு!
கேகாலை – ரணவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு கண்டி பிரதான வீதியில் வேன் ஒன்றுடன் 3 மோட்டார் சைக்கிள்கள் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.