இலங்கையில் 10 இலட்சம் அரச ஊழியர்களிடமிருந்து எந்தவொரு பயனும் கிடையாதாம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாட்டிலுள்ள 16 இலட்சம் அரச ஊழியர்களில், 10 இலட்சம் அரச ஊழியர்களிடமிருந்து எந்தவொரு பயனும் கிடையாது.

அரச ஊழியர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரச சேவையிலுள்ள ஊழியர்களால் விமர்சனங்கள் முன்வைக்கும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

அரசியலை போன்றே, அரச ஊழியர்களும் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். நாம் பாதாளத்திற்கு வீழ்ந்துள்ளோம்.

அரச ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் மிக வேகமாக வளர்ச்சியடைய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு அரசியல் தீர்மானங்கள், அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் திறமையின்மை என்பன வழிவகுப்பதாக சுட்டிகாட்டியுள்ளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *