இலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருகின்றது.

இந்த நிலையில், அந்தத் தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 5 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்றைய தினத்தில் 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 664,975 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களில் 647,629 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டில் 16,544 பேர் தொற்றின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாகவும் தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *