ரணிலின் வருகையால் மொட்டு கட்சி இரண்டாக உடைகிறது!
பதில் ஜனாதிபதி ரணிலை ஜனாதிபதியாக மாற்றும் நாடாளுமன்ற இரகசிய வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கப்படுமென பொதுஜன பெரமுனவின் செயலர் சாகர காரியவசம் தெரிவித்த கருத்தை ,வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நிராகரித்துள்ளார்.
”கட்சி அப்படியொரு முடிவை எடுக்கவில்லை. டலஸ் அழகப்பெரும இன்னமும் பொதுஜன பெரமுனவில்தான் இருக்கிறார்.அவருக்கே எங்களின் அதிகபட்ச ஆதரவு இருக்கும்.” என்றார் பீரிஸ்.
இந்தப் பின்னணியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இரண்டாகப் பிரியும் நிலைமை ஏற்பட்டுள்ளது.