அதிகாரத்தை பயன்படுத்த தயாராகிறது இராணுவம்!
பொதுச் சொத்துக்களுக்கு பாதுகாக்கும் நோக்கில் ஆயுதப்படைகளுக்கு சட்டப்பூர்வமாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் உடனடியாக விலகிக்கொள்ளுமாறும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு குறிப்பிட்டுள்ளது.
மேலும், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகவும் இராணுவம் தங்களது பலத்தை பிரயோகிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.