பிரதமர் ரணிலின் சேதமடைந்த வீட்டின் பெறுமதி 300 கோடி ரூபா!
கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சொந்த இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அந்த இல்லத்தின் மீது தீ வைத்துள்ளனர்.
இந்த வீடு சுமார் 300 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியானது என தெரியவந்துள்ளது.
இந்த வீடு தனது மரணத்தின் பின்னர் ரோயல் கல்லூரிக்கு சேர வேண்டுமென்று ரணில் விக்கிரமசிங்க எழுதி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.