இலங்கை சமூகத்தில் யாசகம் பெறும் மனநிலை அதிகரிப்பு!

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் முக்கால்வாசி மக்கள் வறியவர்களாக மாறியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் யசஞ்சலி தேவிகா ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை காரணமாக மக்கள் தமது உண்மையான எதிரியை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சமூகத்தில் யாசகம் பெறும் மனநிலை அதிகரித்து வருவதாக சிரேஷ்ட பேராசிரியர் யசாஞ்சலி தேவிகா ஜயதிலக்க மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *