இன்று முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு!
கொழும்பு – ஒல்கோட் மாவத்தை பகுதியில் இன்றைய தினம் சர்வமத தலைவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு கொழும்பு உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, குறித்த பகுதியில் பொதுமக்கள்,பொது வீதிகள்,வாகனங்களுக்கு இடையூறினை ஏற்படுத்தும் வகையில், செயற்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.