ரோஹித் சர்மாவின் முன்னாள் காதலி ஆபத்தான நிலையில்!
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் முன்னாள் காதலியுமான சோபிய ஹயாத் நடிகை இந்தியில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் சூப்பர்டூட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.
இவர், தற்போது உடல் நலக்குறைவால் ஸ்பெயினில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரின் உடல்நலக்குறைவுக்கு காரணமாக எனது கடந்த கால வாழ்க்கையை ஆராயவும், என் ஆன்மாவுடன் இணைந்திருக்கவும் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அதனால், உடல் நிலை மோசமடைந்து உடலில் உப்பு அளவு குறைந்து மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து, சோபியா தெரிவிக்கையில், “நான் தனியாக இருக்கிறேன், என் குடும்பம் என்னுடன் இல்லை, என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர் கூறினார்.
ஆகையால், எனக்கு அன்புகாட்ட வேண்டும். நான் இதற்கு முன்பு கூட நோன்பு கடைபிடித்திருக்கிறேன். மேலும் இது எனது முந்தைய பிறவிகளைச் சந்திக்கவும், கடவுள் என்னைச் சுற்றி இருக்கிறார் என்பதை உணரவும் எனக்கு உதவியது.
உண்ணாவிரதத்தைத் மேற்கொண்டு தொடர நேர்மறை ஆற்றல்கள் எனக்கு உதவுகின்றன” என்று கூறினார்.