இலங்கையில் விலைமாதர் அதிகரிப்பு நோய் அதிகரிக்கும் என எச்சரிக்கை!
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தகாத முறையின் தொழிலாளர்களாக மாறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பால்வினை தொற்று நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. மருத்துவத்துறை நிபுணர்களின் சங்க முக்கியஸ்தரான மருத்துவ நிபுணர் சித்ரான் ஹதுருசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் டொலர் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படத் தொடங்கியது முதல் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.
எச்.ஐ.வி. மற்றும் பால்வினை தொற்று நோய்கள் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.