வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி!
எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கு இவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது