மாகந்துர மதூஷின் 23 வங்கிக்கணக்குகளும் பரிசோதனை!
டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள, மாக்கந்துர மதூஷின் அனைத்து வங்கி கணக்குகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் உள்ள 23 வங்கி கணக்குகள் இவ்வாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் பரிசோதிக்கப்படுகிறன.
மதூஷ் பெயரில் டுபாய் வங்கிகளில் உள்ள கணக்குகள் குறித்த தகவல்களை பெற சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக மதூஷூக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஹெரோயின், கொக்கேய்ன் உள்ளிட்ட போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் மனித கொலைகள் என்பற்றின் ஊடாக மாக்கந்துர மதூஷ் 500 கோடி ரூபாவை ஈட்டியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொழும்பு – வாழைத்தோட்டம் – வேல்லவீதி பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் நேற்று இந்த கைது இடம்பெற்றுள்ளது.