பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்த 3 பேருக்கு மயக்கம் 6 வயது சிறுவன் உயிரிழப்பு!

பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்த 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரது குடும்பத்தினர் உணவுடன் பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறிது நேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

இதனிடையே பலாப்பழத்துடன் குளிர்பானம் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அவர்கள்  சிறுவனின் பிரேத பரிசோதனையில் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் எனவும் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *