களனி ஆற்றில் தாயாரால் வீசப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு!
சிலாபம், வென்னப்பு – வைக்கால் கடற்கரையில் கரையொதுங்கிய
நிலையில் மீட்கப்பட்ட சடலம், கடந்த 15ஆம் திகதி கதிரான பாலத்தில் இருந்து தாயாரால் களனி ஆற்றில் வீசப்பட்ட ஐந்து வயது சிறுவனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிறுவனின் சடலம் அவரது பாட்டியால் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
களனி – கதிரான பாலத்தில் இருந்து கடந்த 15 ஆம் திகதி குறித்த சிறுவனை களனி ஆற்றில் வீசிய சந்தேகநபரான தாய், தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது, பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டார்.
இதனையடுத்து அவர் வத்தளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆற்றில் வீசப்பட்ட சிறுவனை கண்டுப்பிடிக்க தேடுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், வென்னப்புவ – வைக்கால் கடற்கரையில் இன்று காலை சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருந்தான்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.