இலங்கையில் நோயாளிகள் ஆபத்தான நிலையில்!

இலங்கை வைத்தியசாலைகளில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளத.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதனால், நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *