இலங்கை மக்களுக்கு நாளை முதல் ஏற்படவுள்ள நெருக்கடி!

டொலர் நெருக்கடியால் இலங்கையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பாடலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நாளை முதல் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என தொழிற்சங்க பிரதிநிதி ஆனந்த பாலித கூறியுள்ளார்.

எரிபொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும், நாளை முதல் பாரிய மக்கள் வரிசை காணப்படும் என்றும் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

95 வீதமான மக்கள் மண்ணெண்ணெய் தேவையை பூர்த்தி செய்யத் தவறினால் மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என ஆனந்த பாலித எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *