பூமியை நோக்கி வரும் பிரமாண்ட விண்கல்!

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி பிரமாண்ட விண்கல் ஒன்று வேகமாக வந்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, இந்த விண்கல் நாளை பூமிக்கு அருகில் வரக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 270 அடி அகலம் கொண்டதாக இந்த விண்கல் உள்ளது என்றும் தில்லியில் உள்ள குதுப்மினார் கோபுரத்தை விட இது அளவில் பெரியது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

பூமிக்கு அருகே நாளை நெருங்கி வந்தாலும் அது பூமியை தாக்கும் வாய்ப்புகள் இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *