இலங்கையில் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை!

உட்புற மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு முகக்கவசம் அணிவது இனி கட்டாயமில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், அதிலிருந்து தப்பிக்கவும் உலகளாவிய ரீதியில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.

தற்போது கொரோனாவின் வேகம் மற்றும் பரவுதல் இலங்கையில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் முகக்கவசம் அணியத்தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *