நீர் கட்டண நிலுவையை செலுத்தாத அரசியல்வாதிகள்!

முன்னணி அரசியல்வாதிகள் பலர் தேசிய நீர்வழங்கல் சபைக்கு இரண்டு கோடிக்கும் அதிகமான நீர் கட்டண நிலுவையை செலுத்தாதுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 85 அரசியல்வாதிகள் இவ்வாறு கட்டண நிலுவைத் தொகையை செலுத்தாமல் தட்டிக் கழித்துள்ளதாகவும், இவர்களில் முன்னாள் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் , உயிரிழந்துள்ள சில அரசியல்வாதிகளும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணபட்டுள்ள அரசியல்வாதிகளில் 50 பேர் வரையானோர் ஆறு தொடக்கம் பத்து இலட்சம் ரூபா வரையான கட்டண மிகுதியை செலுத்தாமல் தட்டிக் கழித்துள்ளனர்.

பத்து இலட்சம் ரூபா வரையில் செலுத்தப்படாத நீர் கட்டணம்

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலுவைக் கட்டணத்தின் மொத்த தொகை 70 லட்சம் ரூபாவை விடவும் அதிகம் என்றும் தேசிய நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது.

அத்துடன் தற்போதைக்கு உயிரிழந்துள்ள முன்னாள் அரசியல்வாதிகள் பலரும் நீர் கட்டணத்தை செலுத்தாமல் மிகுதி வைத்துள்ளதுடன், நீர் கட்டணம் 30 லட்சத்திற்கும் அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக அரசியல்வாதிகளுக்கு நீர் வழங்கல் சபையினால் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பான விபரங்களை அரசாங்கத்தின் உயர்மட்டத்திடம் அண்மையில் கையளித்துள்ளதாகவும் நீர் வழங்கல் சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *