பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள விஷேட அறிவிப்பு!
பெற்றோல் வரிசைகளில் அத்தியாவசிய தேவைகளின்றி நாளைய தினம் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய நாளைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் அறிவித்துள்ளது.
நாளை மறுதினம் முதல் பெற்றோல் விநியோக நடவடிககைகள் வழமைபோன்று இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது