பாகிஸ்தானை அமெரிக்கா அடிமைப்படுத்தி வைத்திருப்பதாக இம்ரான்கான் தெரிவிப்பு!
பாகிஸ்தானை அமெரிக்கா அடிமைப்படுத்தி வைத்திருப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.
பாகிஸ்தானின் ஃபைசலாபாத் நகரில் நடைபெற்ற பேரணியில் பேசிய இம்ரான் கான், அமெரிக்காவை கடுமையாக விமர்சித்தார். சுயநலத்துடன் மட்டுமே செயல்படும் நாடு அமெரிக்கா என குற்றம் சாட்டிய இம்ரான் கான், அந்த நாடு தனக்கு பலன் இருக்காது என்றால், எந்த நாட்டுக்கும் உதவாது என்றார்.
ஊடுருவல் இல்லாமல் பாகிஸ்தானை அமெரிக்கா அடிமைப்படுத்ஹ்டி வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட இம்ரான் கான், ஆனால், அந்த நாட்டால் இந்தியாவிடம் அதிகாரம் செலுத்த முடியாது என்றார். ஏனெனில், இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கொண்டிருப்பதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.
அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்பட்ட அரசு தான் தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது. தற்போதைய ஆட்சியாளர்களால் அமெரிக்காவிடம் சிறிய அளவில் கூட அதிருப்தியை வெளிப்படுத்த முடியாது என தெரிவித்தார்.
தன்னைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகத் தெரிவித்த இம்ரான் கான், தான் கொல்லப்பட்டால், அதற்கு பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் என்றார்.