உடனடி தீர்வு இல்லாவிட்டால் மின்தடை, எரிபொருள் நெருக்கடி தீவிரமடையும்!
அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்தோடு, உடனடி தீர்வு இல்லாவிட்டால் எரிபொருள் நெருக்கடி, மின்தடை மேலும் தீவிரமடையும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்