நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை!
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கும், புதிய அரசாங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகவும் இவ்வாறு நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.