இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவேண்டும் சுப்பிரமணிய சுவாமி!
இலங்கையில் அரசமைப்பு பேணப்படுவதை உறுதி செய்வதற்காக இந்தியா இராணுவத்தை அனுப்பவேண்டும் என சுப்பிரமணிய சுவாமி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் மக்களின் சீற்றத்தை இந்தியாவிற்கு எதிரான வெளிநாட்டு சக்திகள் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.