அமைச்சரவை கலைக்கப்பட்டது!

இலங்கையின் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச, பதவி விலகுவதாக தன்னுடைய பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கையளித்துள்ள நிலையில், அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் ஆளுகையின் கீழ் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *