உணவுப் பொதிகளின் விலையும் அதிகரிப்பு?

உணவகங்களில் உணவு பொருட்களின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டொலர் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.

அதற்கமைய ப்ரைட் ரைஸ், கொத்து மற்றும் சோறு உள்ளிட்டவற்றின் விலை 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய உணவு உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை மற்றும் உணவுகளை பொதி செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

மேலும் இவ்வாறான பின்னணியிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *