பிரதமர் மஹிந்தவை பதவி விலக கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகிய கட்சிகளின் கூட்டணி கடந்த தினம் ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை கையளித்தது.

அந்த கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி நீக்கி அவருக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

நாட்டின் நெருக்கடிக்கு தீர்வினை காண்பதற்கு உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அந்த தரப்பினர் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *