அமெரிக்க பயணத்தை இரத்து செய்தார் பஷில்!
முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க பயணத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் முன்னர் அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிர்வரும் 11 ஆம் திகதி விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
அதன் பின்னர் கலிபேர்னியாவில் உள்ள தனது வீட்டுக்கு செல்லவும் திட்டமிட்டிருந்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில் பெசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கான தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளதாக அறியமுடிகிறது.