மைத்துனிக்கு மயக்க மருந்து கொடுத்து நண்பருடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த கணவன்!

மைத்துனியான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதுடன், சிறுமிக்கு மயக்க மருந்து கொண்டு தனது நண்பரும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மனைவியின் தங்கையான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த இந்த நபர், சில தினங்களுக்கு முன்னர் சிறுமிக்கு மயக்க மருந்து கொண்டு நண்பர் ஒருவரும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அந்தப் பகுதி சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளுக்குத் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் ஊர்காவல்துறை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

விசாரணைகளைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்து ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தினர். சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடடது.

சிறுமிக்கு மயக்க நிலையில் இருந்தபோது வன்புணர்ந்த நபர் தற்போது தலைமறைவாகியுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், அந்த நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *