இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு சனத் ஜயசூரிய நன்றி தெரிவிப்பு!

இக்கட்டான சூழலில் இருக்கும் இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா.

இலங்கை நாடானது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதையடுத்து அந்நாட்டுக்கு இந்தியா உதவிகரம் நீட்டியது. அதன்படி 40 ஆயிரம் டன் டீசலை சமீபத்தில் கப்பல் மூலம் அனுப்பியது.

இதேபோல அரிசியும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியாவின் இந்த உதவிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா நன்றி தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அதிருப்தி அளிக்கிறது.

இது மாதிரியான சூழ்நிலையில் மக்கள் இருப்பது துரதிருஷ்டவசமானது. இந்தியாவை எப்போதும் ஒரு அண்டை வீட்டாராக உங்களுக்கு தெரியும். எங்கள் நாட்டுக்கு அடுத்த பெரிய சகோதரர் எங்களுக்கு உதவுகிறார்.

நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் எங்களுக்கு உதவும் இந்திய அரசாங்கத்துக்கும், பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் இந்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி உள்ளவராக இருக்கிறோம்.

எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு உள்ளது. சில நேரங்களில் 10 முதல் 12 மணி நேரம் மின்சாரம் இல்லை. இலங்கை மக்களுக்கு இது மிகவும் கடினமான சூழ்நிலையாகும். இதனால்தான் மக்கள் வெளியே வந்து போராடுகிறார்கள் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *